sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு

/

கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு

கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு

கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஆக 06, 2011 01:53 AM

Google News

ADDED : ஆக 06, 2011 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'கவுன்சிலிங் பற்றி, கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படாத மாணவனை, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் செல்லமுடி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சதீஷ்குமார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பிளஸ் 2 வகுப்பில், 1,149 மதிப்பெண்கள் பெற்றார். அறிவியல் பாடத்தில், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தார். கூடுதலாக இரண்டு மதிப்பெண்கள் கிடைத்தன. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.



ஒதுக்கீட்டின்படி சதீஷ்குமாரின் வரிசை எண் 399 ஏ. முதல்கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, சதீஷ்குமாருக்கு தகுதியுள்ளது. ஆனால், கவுன்சிலிங் தொடர்பாக எந்தக் கடிதமும் வராததால், அவர் கலந்து கொள்ளவில்லை.

ஐகோர்ட்டில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். மருத்துவக் கல்வி இயக்குனர் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதது, மனுதாரரின் தவறு. எனவே, இரண்டாவது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, மனுதாரருக்குத் தகுதியில்லை' என கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஜோதிமணியன், அரசுத் தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகினர்.



நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு கடிதம் எதுவும் அனுப்பாமல், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதது அவரது தவறு என, அரசுத் தரப்பில் நியாயப்படுத்த முடியாது. விளக்கக் குறிப்பேட்டின்படி, கவுன்சிலிங் தொடர்பாக, தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு இடத்தைக் காலியாக வைத்திருக்க வேண்டும் என, ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில் மனுதாரரைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us