ADDED : ஜூன் 18, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., சேலம் மாநகர் மாவட்ட செயலராக, முன்னாள் கவுன்சிலர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
அ.தி.மு.க., சூரமங்கலம் பகுதி செயலர் பாலு, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மாநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.