sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

/

தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

10


ADDED : ஜூன் 08, 2025 04:59 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:59 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வீட்டில் தனியாக வசித்து வரும் வயதானவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது பலத்த கேள்விகளை எழுப்புவதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us