sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

/

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்: கவர்னர் ரவி

58


ADDED : டிச 12, 2024 11:39 AM

Google News

ADDED : டிச 12, 2024 11:39 AM

58


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி: 'அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது' என கவர்னர் ரவி பேசினார்.

கன்னியாகுமரி, தாமரைப்பதியில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில், அய்யாவழி ஆய்வு மையத்திற்கு தமிழக கவர்னர் ரவி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியதாவது: அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான்.

சனாதன தர்மம்

ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பார்லிமென்டில் ஹிந்துக்கள், ஹிந்து தர்மம் குறித்து கண்டனம் தெரிவித்தனர். முன்பு ஜாதிய அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர். கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us