மணல் கொள்ளை: 7 பேர் கைது லாரிகள், பொக்லைன் பறிமுதல்
மணல் கொள்ளை: 7 பேர் கைது லாரிகள், பொக்லைன் பறிமுதல்
ADDED : மார் 20, 2025 05:00 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 3 இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் ஆற்றிலிருந்து, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை, ஒலக்கூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். ஆலங்குப்பம் சிவா, 32; அடசல் சரவணன், 40; மரக்காணம் மாதவன், 31; ஆடவள்ளிகூத்தான் ஆறுமுகம் மகன் செல்வராம், 26; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, கண்டமங்கலம் போலீசார் பெரியபாபுசமுத்திரம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை, பிடித்தனர்.
போலீசாரை கண்டதும், லாரியை விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த கல்பாக்கம் சக்கரவர்த்தி, 56; வைரம்பேட்டை ஐயப்பன், 30; கீழ்மாவிளங்கை சுந்தர்ராமன், 47; ஆகியோரை கைது செய்தனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.