sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சாத்தான்குளம் வழக்கு டாக்டர் மாயம்

/

 சாத்தான்குளம் வழக்கு டாக்டர் மாயம்

 சாத்தான்குளம் வழக்கு டாக்டர் மாயம்

 சாத்தான்குளம் வழக்கு டாக்டர் மாயம்


ADDED : பிப் 04, 2026 06:52 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை 2020 ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சி.பி.ஐ. விசாரிக்கிறது.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.

மதுரையை சேர்ந்த டாக்டர் செங்குட்டுவனிடம் தனது தரப்பு சாட்சியாக விசாரிக்க ஸ்ரீதர் அந்நீதிமன்றத்தில் மனு செய்தார். நேற்று விசாரித்த நீதிபதி முத்துக்குமரன் டாக்டரை ஆஜராகச் சொல்லுங்கள் என ஸ்ரீதரிடம் கூறினார்.

அங்கு வந்தபின்தான் சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக தன்னை அழைத்து வந்தது டாக்டருக்கு தெரிய வந்தது. அவர் சாட்சியம் அளிக்க விருப்பமின்றி மாயமானார். மனுவை ஸ்ரீதர் வாபஸ் பெற்றார்.






      Dinamalar
      Follow us