sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

/

சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

12


UPDATED : ஜன 04, 2025 05:53 PM

ADDED : ஜன 04, 2025 10:51 AM

Google News

UPDATED : ஜன 04, 2025 05:53 PM ADDED : ஜன 04, 2025 10:51 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அப்பையநாயக்கன்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று(ஜன.4) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் பெரும் தீ பற்றிக் கொள்ள, ஆலையில் இருந்த பட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதற ஆரம்பித்தன. பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில் 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

வெடிகள் வெடித்துச் சிதறியதால் பல மீட்டர் தூரத்துக்கு வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தரைமட்டமான கட்டடங்களில் அதிக உஷ்ணம் காணப்படுவதால், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறியும் பணிகளில் சிக்கல் நிலவுகிறது.

வெடி விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. பலர் காணவில்லை என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு வெடிவிபத்தை அடுத்து மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் சம்பவ பகுதிக்கு நேரில் சென்றார். விபத்து எப்படி நிகழ்ந்தது, காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தினார். இதனிடையே வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமது சுதினுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை நிவாரணம்


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை சார்பில் தலா ரூ.5.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இறந்தவர்களின் ஈமச்சடங்கிற்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஏழு பேர் மீது வழக்கு


பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக, சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் என்பவர்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வச்சக்காரப்பட்டி போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us