sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

/

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு

12


UPDATED : பிப் 18, 2024 06:07 AM

ADDED : பிப் 18, 2024 06:04 AM

Google News

UPDATED : பிப் 18, 2024 06:07 AM ADDED : பிப் 18, 2024 06:04 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை, :புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிணற்றில், 100க்கும் மேற்பட்ட பண்டல்களாக, 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கந்தர்வக்கோட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அதிகாரிகள், சீருடைகளை மீட்டனர். அவற்றை கிணற்றில் வீசியது யார் என, தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சீருடைகள், கடந்த, 2018- - 2019 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டியவை. பின், 2020ம் ஆண்டு பள்ளி சீருடை வண்ணம் மாற்றப்பட்டது.

Image 1233623
தொடக்கக் கல்வி படிக்கும் மாணவ - மாணவியரின் சீருடைகள் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. இதை யார் வீசியது என, விசாரணை நடத்தப்படும். அரசு விதிப்படி சீருடைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாமல் நான்கு ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்திருந்து, தற்போது அனுப்பினால் பிரச்னையாகும் எனக்கருதி, கிணற்றில் வீசி இருக்கலாம்.
Image 1233624


சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us