sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

/

கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

23


ADDED : நவ 04, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 04, 2024 02:49 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராஜா அறிக்கை:

திருச்செந்துார் கோவிலில், கடந்த 6 ஆண்டுகளாக, பவுர்ணமி அன்று, கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, கடலுக்கு ஆரத்தி எடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகின்றனர்.

அன்று இரவு கடற்கரை மற்றும் கோவிலின் வெளியே, தங்குகின்றனர். அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி, முருக பெருமானை வழிபட்டு, வீடு திரும்புகின்றனர்.

ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியத்தாலும், கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தாலும், பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நல்ல கழிவறை வசதி செய்து தர வேண்டும்.

குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய, அனுமதிக்க வேண்டும். தொலை துாரத்தில் இருந்து நடந்து செல்ல வற்புறுத்தக் கூடாது.

கடல் ஆரத்தியை அனுமதிக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அன்னதானம் கொடுப்பதை அனுமதிக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின், தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us