sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்

/

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 05, 2026 07:37 PM

Google News

ADDED : மார் 05, 2026 07:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் செக்சன்-17 நிலப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில், 34,476 ஏக்கர், செக்சன்-17 பிரிவு என அரசால் வகைப்படுத்தப்பட்ட, நிலப்பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கில், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'மக்கள் வாழ்ந்து வரும், 3,476 ஏக்கர் நிலத்தை, வருவாய் நிலமாக மாற்றி அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கவும்; மீதமுள்ள நிலத்தை, வன நிலமாக மாற்றவும்' அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

'இந்த மனு, கூடலுார் மக்களை பாதிக்கும்' என, வலியுறுத்தி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று, கூடலுாரில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில அரசை கண்டித்தும், மனுவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.






      Dinamalar
      Follow us