ADDED : நவ 07, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
செகந்திராபாதில் இருந்து, வரும் 14ம் தேதி இரவு 7:40க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:05 மணிக்கு விழுப்புரம் வரும்
விழுப்புரத்தில் இருந்து இன்று மற்றும் வரும் 15ம் தேதிகளில், மாலை 4:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:40 மணிக்கு செகந்திராபாத் செல்லும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

