கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் சீமான்
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் சீமான்
ADDED : மார் 15, 2026 05:01 AM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, கன்னியாகுமரியில் இருந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்குகிறார்.
சட்டசபை தேர்தலில், இம்முறையும் நா.த.க., தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார். அவர், காரைக்குடியில் போட்டியிடுகிறார். சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரத்தை விரைவில் அவர் துவக்குகிறார்.
நா.த.க.,வினர் கூறியதாவது:
தே ர்தல் பிரசார பயணத்தை, கன்னியாகுமரியில் இருந்து சீமான் துவக்க உள்ளார். ஒவ்வொரு நாளும், குறைந்தது ஐந்து முதல் 10 தொகுதிகளை உள்ளடக்கிய வகையில், அவரது பிரசார சுற்றுப்பயணம் நடக்கும். தமிழகம் முழுதும் சீமான் பிரசாரத்தில் ஈடுபடுவார்.
பணம், பொருட்கள் போன்ற இலவசங்களை வாரி வழங்கி, திராவிட கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. ஆனால், தரமான கல்வி, இலவச மருத்துவம் என்பதை முன்னிறுத்தி நாங்கள் பிரசாரம் செய்கிறோம்.
இவ்வாறு கூறினர்.

