sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

/

அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்


ADDED : நவ 01, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 01, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.,வில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.

'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்திய செங்கோட்டையன், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார். அதன் காரணமாக, கட்சி பதவிகளை பறிகொடுத்தார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை, செங்கோட்டையன் சந்தித்தார். பன்னீர், தினகரனுடன் இணைந்து, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்த செயல், பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில், செங்கோட்டையன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற் கிடையே தனது நீக்கம் குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us