sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

/

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

3


ADDED : டிச 05, 2025 08:00 PM

Google News

3

ADDED : டிச 05, 2025 08:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விருத்தாசலம் வருவாய்த்துறை முதுநிலை உதவியாளர் ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திருமுட்டம் தாலுகாவை சேர்ந்தவர் நேரு. இவரின் மாமனார் நாகராஜனுக்கு சொந்தமான 8.50 சென்ட் நிலத்திற்கான பட்டா பக்கத்து நிலத்து உரிமையாளர் பெயரில் தவறாக இருந்துள்ளது. இதனை சரி செய்ய விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ராஜ்குமார் என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நேரு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் ஆலோசனைப்படி ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை நேரு கொடுத்தார். தாலுகா அலுவலக வாயிலில் லஞ்சப்பணத்தை வாங்கிய ராஜ்குமாரை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us