செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 21, 2024 02:54 PM

சென்னை: 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்,' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக.,21) நடைபெற்றபோது, 'செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக' அமலாக்கத்துறை வாதிட்டது. இதனையடுத்து, 'செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை ஆக.,28க்கு ஒத்திவைத்தனர்.