செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜன 30, 2024 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு இன்று (ஜன.,30) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணிநேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 230 நாட்கள் ஆகியும் இன்னும் அமைச்சராக தொடர்வது ஏன்? சட்டம் அனைவருக்கும் சமம்தானே'' எனவும், ''''ஜாமின் மனுவை ஆராய்ந்ததில் கடந்த முறை மறுத்த சூழல்கள் மாறியதாக தெரியவில்லை'' என்றும் கூறிய நீதிபதி, செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.