sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை டூ - வீலர் விபத்தில் பலி

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை டூ - வீலர் விபத்தில் பலி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை டூ - வீலர் விபத்தில் பலி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை டூ - வீலர் விபத்தில் பலி

1


ADDED : ஜன 15, 2024 02:20 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே டூ -- வீலர் மோதிய விபத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறை துணை செயலர் பிரதாப் ஐ.ஏ.எஸ்.,சின் தந்தை முருகவனம், 56, உயிரிழந்தார்.

வத்திராயிருப்பு, மறவர் தெற்கு தெருவில் வசித்த அவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு விவசாய வேலைக்கு ஆட்களை அமர்த்துவதற்காக கூமாபட்டி சென்று, தன் டூ - வீலரில் வத்திராயிருப்பிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

முருகவனம் ஓட்டிய இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில், சேது நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிச்சை உட்கார்ந்திருந்தார்.

மூலக்கரை அருகே வந்த போது எதிரே கூமாபட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரன், 30, ஓட்டி வந்த டூ - வீலர் இவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில், மகேந்திரன், முருகவனம் பலத்த காயமடைந்து, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முருகவனம் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

முருகவனம் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., சீனிவாச பெருமாள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us