sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு; 12 கிலோ வெள்ளியில் தயாரானது

/

பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு; 12 கிலோ வெள்ளியில் தயாரானது

பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு; 12 கிலோ வெள்ளியில் தயாரானது

பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிக்கதவு; 12 கிலோ வெள்ளியில் தயாரானது


ADDED : அக் 12, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு வெள்ளித்தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.

பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அர்த்தமண்டப வாயிலில் இரட்டை மரக்கதவு, நிலை வாசலில் வெள்ளித்தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டு தற்போது பழுதடைந்துள்ளது. தற்போது கோயில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அர்த்தமண்டப நிலை வாசல், மரக்கதவுகளில் பதிக்கப்பட்ட வெள்ளி தகடுகளை புனரமைக்கும் பணி அக்.,9ல் துவங்கியது.

பழைய வெள்ளித் தகடுகள் அகற்றப்பட்டன. அப்போது கதவின் மரம் பழுதுபட்டிருந்தது. அதனை சரி செய்து புதிய கதவு உருவாக்கப்பட்டு அதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 12 கிலோ வெள்ளியை பயன்படுத்தி தகடுகள் பதிக்கப்பட்டன. இந்த வெள்ளியை கரூரைச் சேர்ந்த முருக பத்தர் ஒருவர் வழங்கினார்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விளா பூஜை நடந்தது. புணராவாஹனம் செய்யப்பட்டு, கலசநீரை சன்னதி பிரகாரத்தில் எடுத்து வநதுத புதிய வெள்ளி கதவுக்கு பூஜைகள் நடந்தன. பின் வெள்ளிக்கதவு திறக்கப்பட்டு சன்னதிக்குள் இருந்த குழந்தை வேலாயுதசுவாமி, சந்திரமவுலீஸ்வரர், சாரதாம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன.

கோயில் இணை கமிஷனர் மாரிமுத்துவிடம் வெள்ளிக்கதவின் சாவி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us