சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம்
சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம்
ADDED : ஜன 10, 2025 09:51 AM

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி துரித நடவடிக்கை ஒன்றை எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, விமானம் தரையிறங்க சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக, 159 பயணிகள் உயிர் தப்பினர். மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.