ADDED : ஜன 10, 2026 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், 589 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை போன்ற காரணங்கள் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத் துறை முடிவு செய்தது.
அதன்படி, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், தர்மபுரி, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு பணியில் இருந்த, 32 சார் - பதிவாளர்கள், 31 உதவியாளர்களை இடமாற்றம் செய்து, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன், தற்காலிக பணி நீக்கத்தில் இருந்து, நான்கு உதவியாளர்களை விடுவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

