உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 09, 2026 11:45 PM

அ நிறம் | அளவு
சென்னை: கள்ளக்குறிச்சியில், ஐந்து சார் - பதிவாளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த, 4ல் மாநிலம் முழுதும், 46 சார் - பதிவாளர் அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 37.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இச்சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை சார் - பதிவாளர் சந்திர சேகர், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு சார் - பதிவாளர் ஸ்ரீதர், திருப்பத்துார் மாவட்ட சார் - பதிவாளர் ராதிகா உட்பட, ஐந்து சார் பதிவாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
