sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் : மாஜிஸ்திரேட் உத்தரவு

/

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் : மாஜிஸ்திரேட் உத்தரவு

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் : மாஜிஸ்திரேட் உத்தரவு

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் : மாஜிஸ்திரேட் உத்தரவு


ADDED : செப் 21, 2011 01:10 AM

Google News

ADDED : செப் 21, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''சிவகாசி ஜெயலட்சுமி நகை மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் தேவையில்லை,'' என கூறி அரசு தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கோவை நகை வியாபாரி முருகவேல். இவரிடம் சிவகாசி ஜெயலட்சுமி ரூ.மூன்றரை லட்சத்திற்கு நகைகளை வாங்கி பணம் தராமல் ஏமாற்றினார். முருகவேல் புகாரின்பேரில், சிவகாசி ஜெயலட்சுமி, தந்தை அழகிரிசாமி, சகோதரர் சீனிவாசன், உறவினர்கள் அழகர்சாமி, நாராயணசாமி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. ஜெயலட்சுமி வக்கீல் மோகன்தாஸ் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில், வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பெற்றிருந்தார். நேற்று மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கதிரவன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சிகள் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மணிவண்ணன், ஷாஜகான் நேற்றும் ஆஜராகவில்லை. அரசு வக்கீல் உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் ஆஜராக அவகாசம் கோரி மனு செய்தார். மாஜிஸ்திரேட் அதை ஏற்கவில்லை. இன்ஸ்பெக்டர்களின் சாட்சியம் தேவையில்லை என கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தார். கேள்வி விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us