sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'கொடை'யில் மீண்டும் பனி தாக்கம் அதிகரிப்பு

/

 'கொடை'யில் மீண்டும் பனி தாக்கம் அதிகரிப்பு

 'கொடை'யில் மீண்டும் பனி தாக்கம் அதிகரிப்பு

 'கொடை'யில் மீண்டும் பனி தாக்கம் அதிகரிப்பு


ADDED : ஜன 05, 2026 04:52 AM

Google News

ADDED : ஜன 05, 2026 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் நிலவுகிறது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் உறை பனியின் தாக்கத்தால் கடுங்குளிர் நடுங்க வைத்தது. இருந்த போதும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சில தினங்கள் சாரல், மிதமான மழை பெய்தது. இதனால் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பனியின் தாக்கம் தணிந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதியம் 3:00 மணிக்கு பனியின் தாக்கத்தால் குளிர் நிலவுகிறது. பகலில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், இரவில் குறைந்த பட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகி வருகிறது.

இதற்கிடையே மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கீழ் பூமி, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை 10:00 மணி வரை பனியின் தாக்கம் நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை தாமதமாக துவங்குகிறது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் மலைப் பகுதியினர் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us