sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

/

போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

3


ADDED : ஆக 13, 2025 04:23 AM

Google News

3

ADDED : ஆக 13, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'போதைப்பொருள் கடத்தல் கும்பல், இரவு நேரத்தில் தங்கும் இடங்கள், விடுதிகள், கல்லுாரிகளை குறி வைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றன' என, இ.பி.சி.ஐ.டி., எனும் அமலாக்க பணியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவான அமலாக்க பணியகத்தின் இயக்குநர், கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

போதைப் பொருள் புழக்கம், வணிக ரீதியாக மிகப்பெரிய 'நெட் ஒர்க்' வாயிலாக செயல்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், தலைமைச் செயலர், கலெக்டர்கள், காவல் துறை, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து ஒழுங்குமுறை துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை, கடலோர பாதுகாப்பு படை, கடற்படையினருடன் இணைந்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'வாட்ஸாப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் தற்போது போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் கடத்தல் கும்பல், இரவு நேர தங்கும் இடங்கள், விடுதிகள், கல்லுாரிகளை குறி வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றை பொது மக்களின் பங்களிப்புடன் முறியடித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us