சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள் வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள் வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : ஆக 09, 2024 01:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் அதனை முடக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில், சமூக ஊடகங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம். அதனை முடக்க நினைப்பது சரியல்ல.
அதன் வருகைக்கு பிறகு அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்து உள்ளது ஆரோக்கியமானது. மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் முடக்கக்கூடாது. 77 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.