உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 14, 2024 10:08 PM
அ நிறம் | அளவு
ஊராட்சி பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரசு தேர்வு இயக்ககத்தால், ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பிளஸ் 2 படிக்கும் வரை, ஆண்டு தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 20ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். டிசம்பர், 14ல் தேர்வு நடக்க உள்ளது.
