sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த சபாநாயகர்

செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த சபாநாயகர்

செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த சபாநாயகர்


ADDED : நவ 06, 2024 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 07:49 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:''செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, வெளிப்படையானதாக, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும்,'' என, சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 67 வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு, கடந்த 5ல் துவங்கி 8 ம் தேதி வரை நடக்கிறது. இதில், தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். மாநாட்டின் ஒரு பகுதியாக, 'பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு - வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.

இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு வழியே தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில், தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுகின்றன. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 'செயற்கை நுண்ணறிவு' பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மை உடையதாகவும், இருக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us