sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சரஸ்வதி புஷ்கரம் விழா பத்ரிநாத், கேதார்நாத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்

/

சரஸ்வதி புஷ்கரம் விழா பத்ரிநாத், கேதார்நாத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி புஷ்கரம் விழா பத்ரிநாத், கேதார்நாத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி புஷ்கரம் விழா பத்ரிநாத், கேதார்நாத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்


UPDATED : மார் 30, 2025 12:24 AM

ADDED : மார் 29, 2025 09:00 PM

Google News

UPDATED : மார் 30, 2025 12:24 AM ADDED : மார் 29, 2025 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உத்தரகண்ட் மாநில சுற்றுலா நிறுவன அதிகாரிகள் விரேந்திரசிங் ராணா, சுனில் ராஜு ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில், சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் வாயிலாக, பயணியர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை, உத்தரகண்ட் சுற்றுலா கழகமும் மற்றும் இந்திய ரயில்வேயும் இணைந்து செய்துள்ளன. 16 நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக சிறப்பு ரயிலில், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகண்ட் மாநிலத்தின் பிற கோவில்களை தரிசிக்கலாம்.

இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி பெட்டியில், ஒருவருக்கு கட்டணம், 58,500 ரூபாய். போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவு, பயண காப்பீடு, மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மேலும் தகவல்களுக்கு, www.tour times.in என்ற இணையதளம் மற்றும் 73058 58585 என்ற மொபைல் போன் எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்






      Dinamalar
      Follow us