sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

/

தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

16


ADDED : ஏப் 05, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:49 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக, 2018 --- 2020 வரை ராமேஸ்வரம் முதல் நாகை வரை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின், 74 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

இப்படகுகளை 2022ல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி நீதிமன்றங்கள் அரசுடைமையாக்கின.

இப்படகுகள் சேதம் அடைந்து, இலங்கை கடற்கரையில் கிடக்கும் நிலையில், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை நடுக்கடலில் இப்படகுகளை மூழ்கடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களின் வலைகள், மூழ்கடித்த படகுகளில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே, இதேபோன்று மீனவர் வலைகளை சேதப்படுத்த, கடந்த 2019ல், சேதமடைந்த 15 பஸ்களை, காங்கேசன்துறையில் இருந்து நடுக்கடலில் போட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இந்த முடிவை தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us