sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டவிரோத குடியேற்றம் இலங்கை நபர்கள் கைது

/

சட்டவிரோத குடியேற்றம் இலங்கை நபர்கள் கைது

சட்டவிரோத குடியேற்றம் இலங்கை நபர்கள் கைது

சட்டவிரோத குடியேற்றம் இலங்கை நபர்கள் கைது


ADDED : டிச 22, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இருவரை, 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்த நவநாதன், 42. மனைவியை பிரிந்த நிலையில், 2015ல் கள்ளத்தனமாக படகு வாயிலாக தமிழகம் வந்துள்ளார். போலீசில் தன் விபரங்களை பதிவு செய்த அவர், மாங்காடு பகுதியில் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

பின்னாளில், தன் விபரங்களை புதுப்பிக்காமல், போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஆதார் போன்ற ஆவணங்களை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இலக்கியன், 52, தன் மகளுடன், 2019ல் கள்ளத்தனமாக படகில் வந்துள்ளார்.

இருவரும் மாங்காடு பகுதியில் தங்கி, ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இதில், இலக்கியனின் மகள், அதே பகுதியில் விடுதியில் தங்கி, பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து, கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, மாங்காடு பகுதியில் தங்கியிருந்த நவநாதன், இலக்கியனை, கியூ பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us