காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்
ADDED : அக் 15, 2024 11:30 PM

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தென் மேற்கு கடலில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே, சுமார் 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 17ம் தேதி காலை, புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே, 35 - 55 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். நேரம் செல்லச் செல்ல, மழையின் அளவும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.