ADDED : ஆக 19, 2011 01:38 AM
விழுப்புரம் : விழுப்புரம் சாவி அறக்கட்டளை சார்பில் மதுரை மாணவருக்கு கல்லூரி விடுதியில் ஏழு மாதத்திற்கான உணவு செலவிற்கு காசோலை வழங்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் முனியாண்டி; பார்வையற்றவர்.
இவரது மனைவி ஊனமுற்றவர். இவர்களின் மகன் முத்துக்குமார். பொறியியல் கல்லூரியில் படிக்க போதிய பண வசதியின்றி தவிப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து விழுப்புரம் சாவி அறக்கட்டளை பொருளாளர் சியாம்சுந்தர், நிர்வாகிகள் மதன், சோமு, ஆலோசகர் ஜேம்ஸ் கடந்த 16ம் தேதி மதுரை சென்று மாணவர் முத்துக்குமாரை சந்தித்தனர். சாவி அறக்கட்டளை சார்பில் 2011 -12 கல்வி ஆண்டிற்கு கல்லூரி விடுதி உணவு கட்டணம் மாதம் 1,500 வீதம் ஏழு மாதத்திற்கான தொகை 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி பெயரில் மாணவர் முத்துக்குமாரிடம் வழங்கினர்.

