sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே'' காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

/

தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே'' காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே'' காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே'' காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

8


ADDED : ஆக 13, 2024 04:04 PM

Google News

ADDED : ஆக 13, 2024 04:04 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே காரணம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக செய்துள்ளதால் முதலிடம் கிடைத்துள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே மகத்தான வெற்றிக்கு காரணம். ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை ஐஐடி.,யில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள், ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டன. முதல் 3டி பிரிண்டட் ராக்கெட், முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நாங்கள் செய்துள்ளோம். ஹைப்பர்லூப் உள்ளிட்ட பல திட்டங்களை செய்துள்ளோம். 'ஸ்டார்ட்அப் 100' போன்ற சில தொலைநோக்கு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

இதெல்லாம் முழுமையடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். நம் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு இளநிலை பட்டப்படிப்பையாவது படிக்க வேண்டும். அதற்காக சென்னை ஐஐடி.,யை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல எங்கள் முயற்சியை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us