sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

/

சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

5


ADDED : பிப் 24, 2025 09:41 PM

Google News

ADDED : பிப் 24, 2025 09:41 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிரிழந்த சிலம்ப மாஸ்டருக்கு, அவரது மாணவர்கள் கதறி அழுதபடி சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய காட்சி, காண்பவர் கண்களை குளமாக்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன். இவர் திருமயம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார்.

கபடி வீரரான இவர், கபடி போட்டியில் விளையாடிய போது கையில் அடிபட்டது. உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் கபடி போட்டியில் விளையாட சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இன்று ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் திருமயம் தாலுகா அலுவலகம் எதிரே அவர் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது அவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.

அழுது கொண்டே சிலம்பம் சுற்றி குருவுக்கு அஞ்சலி செலுத்தினர். காண்பவர் கண்களை குளமாக்கிய இந்த காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.






      Dinamalar
      Follow us