sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: பா.ஜ., ராஜா விமர்சனம் பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு

/

அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: பா.ஜ., ராஜா விமர்சனம் பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு

அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: பா.ஜ., ராஜா விமர்சனம் பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு

அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: பா.ஜ., ராஜா விமர்சனம் பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு


ADDED : பிப் 24, 2024 12:06 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:''தி.மு.க.,வில் முதல்வர் குடும்பம் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் மட்டத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அவர் கூறியதாவது:

தி.மு.க.,வில் முதல்வர் குடும்பம் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் மட்டத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது. பெரம்பலுாரில் நேரு மகனை வேட்பாளராக முடிவு செய்து விட்டனர்.

பா.ஜ.,வில் மிகப்பெரிய பொறுப்பில் இல்லாதவர்கள் தான் முதல்வர், துணை முதல்வர் ஆகியிருக்கின்றனர். பா.ஜ., மட்டுமே ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி என்பது மக்களுக்கு புரிந்து விட்டது.

வரும் தேர்தல், பா.ஜ., மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகள் என்று தான் இருக்கும்.

மின்னணு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்பதை இந்த தொகுதி எம்.பி., கார்த்தி ஏற்றுக்கொண்டார்.

தேர்தல் கமிஷன் பகிரங்க அறிவிப்பு செய்தும் கூட, அதில் யாராலும் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முடியவில்லை. அண்ணாமலையின் யாத்திரைக்கு வரும் கூட்டம் நிச்சயமாக ஓட்டுகளாக மாறும்.

டில்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே கிடையாது; அவர்கள் அனைவரும் வியாபாரிகள், மண்டி உரிமையாளர்கள். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் கைகளில் அவர்களுக்கான ரிமோட் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us