ADDED : பிப் 29, 2024 04:41 AM

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தைச் செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அலுவலகம் செல்வோர் பொருட்கள் வாங்க வசதி யாக, மாதத்தின் முதலாவது, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும்; அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், 2014ல் அறிவிக்கப்பட்டது. அந்த நடைமுறை அமலில் உள்ளது.
'விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புகின்றனர். அதனால் விடுமுறை கிடைப்பதில்லை.
'மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் மிகக் குறைந்த நபர்களே பொருட் கள் வாங்க வருகின்றனர். எனவே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர்கள், கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது.

