sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

/

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

29


UPDATED : பிப் 11, 2026 03:56 PM

ADDED : பிப் 11, 2026 07:46 AM

Google News

29

UPDATED : பிப் 11, 2026 03:56 PM ADDED : பிப் 11, 2026 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, டில்லி கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

மாநில வாரியாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்பு செயலருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

'நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என கூற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள், 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு தர வேண்டும்; ஆறு அமைச்சர் பதவிகளை பெற வேண்டும்; 41 தொகுதிகளுக்கு குறையக்கூடாது' என பேசியுள்ளனர்.

'இந்தக் கோரிக்கையை தி.மு.க., ஏற்க முன்வரவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் தெரியவந்ததும், செல்வப்பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us