sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

/

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

28


ADDED : ஜன 29, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:08 AM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் 'கார்த்திகை தீபம்' ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதுாறு கருத்துகளை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனால், ஆவேசமடைந்த தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.

இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வரலே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்க கேட்டு தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக் கின் அடுத்த விசாரணையை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புத்தகத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை


திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையிலான புத்தகம் மற்றும் அதன் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: கடந்த 7ம் தேதி சென்னையில் நடந்த புத்தக காட்சியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. கீழைக்காற்று பதிப்பகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரங்குகளில் சோதனையிட்டபோது, இழிவான, அவதுாறானதாக கூறப்படும் புத்தகம் எதுவும் அங்கு விற்கப்படவில்லை.
நீதிபதியை அவமதிக்கும் வகையில், கீழைக்காற்று பதிப்பகம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள், கேலிச்சித்திரங்கள் என, அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன. எதிர்காலத்தில் நீதிபதி குறித்து அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்கள், ஏதேனும் புத்தக காட்சியிலோ அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாகவோ விற்பனை செய்யப்படுவது கண்ட றிய ப்பட்டால், உடனே பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us