sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

/

ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

9


ADDED : நவ 18, 2025 09:15 PM

Google News

9

ADDED : நவ 18, 2025 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : ஈமச்சடங்கு பணம் வழங்க, 2,000 ரூபாய் லஞ்ச பெற்ற தனி தாசில்தாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்தவர் மலர், 60. இவர், ஒரு மாதத்திற்கு முன், வயது முதிர்வு காரணமாக இறந்தார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு, ஈமச்சடங்கு செலவிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 25,000 ரூபாய் பெறுவதற்கு, மலரின் மகன் சேகர், 40, நாட்றம்பள்ளி தனி தாசில்தார் வள்ளியம்மாளை அணுகினார். அதற்கு அவர், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். இது குறித்து திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் சேகர் புகார் செய்தார்.

இன்று(நவ.,18), நாட்றம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், தனி தாசில்தார் வள்ளியம்மாளிடம், சேகர், 2,000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், வள்ளியம்மாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us