sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

/

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது

22


ADDED : ஜன 29, 2025 06:20 PM

Google News

ADDED : ஜன 29, 2025 06:20 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூ.5 லட்சம் லஞ்ச பணத்திற்கு, ரூ.10 ஆயிரம் முன்பணம் வாங்கிய தாசில்தாரை சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை தினமான இன்று ஜன.,29ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, இது சம்பந்தமாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us