sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

/

ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது; மக்கள் அதிர்ச்சி!

78


UPDATED : டிச 03, 2024 09:17 PM

ADDED : டிச 03, 2024 05:52 PM

Google News

UPDATED : டிச 03, 2024 09:17 PM ADDED : டிச 03, 2024 05:52 PM

78


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திருவண்ணாமலையில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு செப்., மாதம் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது. சுமார் 15 கி.மீ., தூரம் அவர்கள் சுற்றி, வேறு ஊர்களுக்கு சென்றனர்.

Image 1352059இதனையடுத்து, அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. செப்., 2ம் தேதி தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

Image 1352060இதில், அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் இந்த வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வெள்ளத்தை தாங்க முடியாத வகையில் தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது எப்படி? தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லையா என கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண்டனம்

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தி.மு.க., அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது . இந்த தி.மு.க., ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம். மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டபடுகிற பாலங்களை , மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு விடியா தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us