sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

/

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

20


UPDATED : பிப் 10, 2025 01:26 PM

ADDED : பிப் 10, 2025 11:32 AM

Google News

UPDATED : பிப் 10, 2025 01:26 PM ADDED : பிப் 10, 2025 11:32 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அமைச்சர் கூறியதாவது: சென்னையைச் சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனப்படும் 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கி.மீ., தொலைவுக்குள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும். மதுரை, நெல்லை போன்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் தீர்மானத்தை இன்றைய அமைச்சரவையில் முடிவெடுத்து, 6 மாதத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில், பட்டா கோரி விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், அதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு இதுவரையில் பட்டா வழங்கியுள்ளோம். 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் பணியும் செய்து வருகிறோம்.

அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால், தாலுகா வாரியாக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us