தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ராஜினாமா
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ராஜினாமா
UPDATED : ஜன 10, 2024 03:22 PM
ADDED : ஜன 10, 2024 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை இன்று(ஜன.,10) ராஜினாமா செய்தார்.
இவர், 1989 முதல் 1991வரை திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர். 1996 முதல் 2001 வரை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். 2002 முதல் 2008 வரை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். 2021ல் தி.மு.க., அரசு அமைந்ததும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆக ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர். சுண்முக சுந்தரம் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளார்.
புதிய அட்வகேட் ஜெனரல் ஆக ராமன் நியமிக்க, கவர்னருக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

