sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

/

அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

73


UPDATED : ஆக 28, 2025 12:56 PM

ADDED : ஆக 28, 2025 11:09 AM

Google News

73

UPDATED : ஆக 28, 2025 12:56 PM ADDED : ஆக 28, 2025 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமெரிக்க வரியால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவதூறுகளில்…!

தமிழகம் வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை சக்தி என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
திராவிடத்தால் வாழ்கிறோம். திராவிடமே நம்மை உயர்த்தும். எல்லோரையும் வாழ வைக்கும். அமித் ஷா முதல் பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜ அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ. சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம். போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது.
திமுக ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.








      Dinamalar
      Follow us