sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

/

'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

5


ADDED : ஜன 02, 2025 05:07 PM

Google News

ADDED : ஜன 02, 2025 05:07 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு கருணைத்தொகை, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023-2024ம் ஆண்டிற்கான கருணைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 லட்சம் நிதி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி

'சி' மற்றும் ' டி' பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகை

தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.1,000 கருணைத்தொகை

'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us