தமிழகத்தில் பிப்.,11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
தமிழகத்தில் பிப்.,11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
ADDED : பிப் 05, 2024 01:59 PM

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.,05) முதல் வரும் பிப்.,11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: இன்றும் (பிப்.,05) நாளையும் (பிப்.,06) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(பிப்.,05) முதல் வரும் பிப்.,11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

