sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய கல்வி கொள்கை விவகாரம்; மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பதில்

/

புதிய கல்வி கொள்கை விவகாரம்; மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பதில்

புதிய கல்வி கொள்கை விவகாரம்; மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பதில்

புதிய கல்வி கொள்கை விவகாரம்; மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பதில்

62


ADDED : பிப் 21, 2025 01:57 PM

Google News

ADDED : பிப் 21, 2025 01:57 PM

62


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:'மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது' என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

திருச்சியில், மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தரமான கல்வியை தான் தமிழகம் வழங்கி வருகிறது. புதிய கல்வி கொள்கை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. புதிய கல்வி கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும். நிபந்தனைகள் விதிக்க கூடாது. 3வது மொழியை திணிப்பது அரசியல் சாசனம் மற்றும் மாநில உரிமைக்கு எதிரானது.

இருமொழி கல்வி கொள்கையை பின்பற்றி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இஸ்ரோ உள்ளிட்ட உயர்துறையில் பணியாற்றுக்கிறார்கள். மத்திய அரசு தமிழக அரசை பிளாக் மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். ஹிந்தி மொழியை விரும்பி கற்றுக்கொள்வதை எதிர்க்கவில்லை. மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது.

ஹிந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்துவிட்டன. அதே நிலை தமிழுக்கு வந்துவிட கூடாது. மும்மொழி கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றலை பாதிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் இருமொழி கல்விக் கொள்கையை ஆதரிக்கின்றன. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us