sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

/

தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

64


ADDED : ஜன 07, 2025 02:06 PM

Google News

ADDED : ஜன 07, 2025 02:06 PM

64


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யு.ஜி.சி., விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல். மத்திய பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பா.ஜ., அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும், கவர்னரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது.

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது, அதிக உயர்கல்வி நிறுவனங்கள் கொண்ட மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழகம் அமைதியாக இருக்காது.

கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு. யுஜிசி.,யின் இந்த நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.






      Dinamalar
      Follow us