sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

/

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

21


ADDED : ஜன 22, 2025 08:16 AM

Google News

ADDED : ஜன 22, 2025 08:16 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில், பஸ்சுக்காக காத்திருந்த தமிழக பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார். டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் எலஹங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டார்.

பஸ் வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

'இந்த சம்பவத்தை பா.ஜ., அரசியலாக்க விரும்புகிறது. பா.ஜ., ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா?' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

இதற்கு, 'அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கர்நாடகா பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us