sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

/

சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

2


UPDATED : ஆக 13, 2024 01:26 PM

ADDED : ஆக 13, 2024 01:19 PM

Google News

UPDATED : ஆக 13, 2024 01:26 PM ADDED : ஆக 13, 2024 01:19 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சர்வதேச ராணுவ விமான தளவாட கண்காட்சியை முன்னிட்டு, கோவை சூலுார் தளத்தில், ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்து அசத்தினர்.Image 1307283

இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, 'தாரங் சக்தி 2024' என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

Image 1307284முதல் கட்ட பயிற்சி ஆக., 6 முதல் 14ம் தேதி வரை சூலுாரிலும், இரண்டாம் கட்ட பயிற்சி செப்., 1 முதல் 14ம் தேதி வரை, ராஜஸ்தான் ஜோத்பூரிலும் நடக்கிறது.

Image 1307285

சாகச நிகழ்ச்சிகள்

ஆக., 6ம் தேதி முதல் விமான பயிற்சியில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று, ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் டைபூன் உள்ளிட்ட உயர் ரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய விமான படையின் சார்ங், லைட் காம்பேட் ஹெலிகாப்டர், தேஜாஸ் மற்றும் ஐரோப்பிய போர் விமானமான டைப்பூன் உள்ளிட்ட விமானிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்தும் அசத்தினர்.

Image 1307287

ஆக.,15ல் மக்கள் பார்க்க அனுமதி!

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்தார். 62 அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

Image 1307288இன்றும், நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம்.






      Dinamalar
      Follow us